Friday, January 19, 2007

செல்போனில் பறந்த வதந்தி!

தமிழகத்தில் புதிதாக கிளப்பிவிடப்பட்டிருக்கும் அகல்விளக்கு ஏற்றும் வதந்தி பற்றி பலரும் பதிவு எழுதியுள்ளனர்.

வதந்தி வரிசையில் இன்னொன்றாக, முந்தாநாள், செளதி அரேபியாவில் யாரோ கிளப்பி விட்ட ஒரு வதந்தியால் தொலைத்தொடர்பு துறை பணம் அள்ளியது.

"Congratulations! Today is the aaniversary of SAWA. So forward this sms to 10 other people u will get free balance of SR.100/="

இது தான் அந்த வதந்தி. குறுஞ்செய்தியாக வந்தது. இச்செய்தியைப் படித்ததும் வேறெதையும் யோசிக்காமல் நூறு ரியால் பெறும் ஆவேசத்தில், முதல் வேலையாக 10 பேருக்கு sms அனுப்பியவர்கள் நிறைய பேர். எனக்கும் வந்தது.
என் கூட வேலைசெய்பவர்களே அனுப்பியிருந்தனர். அவர்களில் ஒருவரை அழைத்தேன்:

"இங்க வாங்க" என்ன இது எஸ் எம் எஸ்?"
" அவர் எனக்கு அனுப்பியிருந்தாருங்க, அதான் நானும்அனுப்புனேன், நீங்களும் அனுப்புங்க"
"இருங்க, 10 எஸெம்மெஸ்ஸுக்கு ரெண்டர ரியால் ஆகுமே, நீங்க எப்படி யோசிக்காமல் செய்யறிங்க?"
"அட, ரெண்டர ரியாலப் பாத்தா முடியுங்களா..! நூறு ரியால் கெடைக்குதுல்ல.."
"இருங்க, நூறு ரியால் கெடைக்குதுன்னு நிச்சயமாத் தெரியுமா..?"
"பின்னே... எல்லாரும் அனுப்புறாங்களே..!"
"எல்லாரும் அனுப்புறாங்கன்னு சொல்லாதீங்க..., நிச்சயம் 100 ரியால் கெடைக்கும்னு எப்படி கன்ஃபார்மா சொல்றீங்க?"
"என்ன செய்யணும்?"
"முதல்ல.., எஸ்ட்டிசி (தொ.தொ.து)க்கு போன் போடுங்க, ஃப்ரீகால் தானே.."

அவர் அப்படியே செய்துப்பார்த்தார், அவர்கள் 'நம்பாதீர்கள், வதந்தி' என்று சொல்லிவிட, அவர் முகம் சுருங்கிவிட்டது.

"சரி,சரி, போங்க" என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.

2 comments:

நாமக்கல் சிபி said...

இதன் மூலம் அறியப்படும் நீதி!

வதந்திகளுக்கு நாடு,மொழி, இனம் போன்ற பேதங்கள் கிடையாது!

வாசகன் said...

நாமக்கல் சிபியண்ணே..
வாங்க, வாங்க,
கருத்துக்கு நன்றி.