Wednesday, June 20, 2007

குர்ஆனை மனனம் செய்த ஹிந்து மாணவி.

மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும் எடுத்துக்காட்ட முடியாததாகவும் திகழ்கிற இந்தியாவில்,
ஒரு ஹிந்து மாணவி தனது ஒன்பதாம் வயதில் இஸ்லாமிய வேத நூலான திருக்குர்ஆனை
மனனம் செய்ய முன்வந்து வியப்பிலாழ்த்தியுள்ளார். இத்தகவலை பீகார் மாநில மதரசா தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

ஹேமலதா என்கிற பள்ளிமாணவி நான்காண்டுகளில் ஒரு ஹாஃபிஸ் (திருக்குர்ஆன் மனனம் செய்தவர்) ஆகிவிடுவார் என்று மதீனத்துல் உலூம் மதரஸா ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இம்மாணவியின் தம்பி ஆஷிஷ் வித்யார்த்தியும் குர்ஆனை மனப்பாடம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார். "நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம், இன்னும் ஊக்கப்படுத்துவோம்" என்று இவர்களின் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

பல முஸ்லிமல்லாத மாணவர்கள் பீகார் மாநில மதரஸா தேர்வாணையத் தேர்வுகள் எழுதியுள்ளதாக இம்மதரஸா நிர்வாகம் கூறுகிறது.

முன்முடிவுகளை கண்களிலிருந்தும் மனதிலிருந்தும் கழுவ இயலாத முதிர்வயதில் இல்லாமல், இளம் வயதிலேயே இத்தகைய முயற்சிகளில் பரஸ்பரம் ஈடுபடுவது நாட்டின் இணக்கச் சூழலுக்கு நலம் பயக்கும் எனலாம்.

செய்தி!

3 comments:

வாசகன் said...

Test!

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in